அரச ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள இன்றும் கிளிநொச்சி மக்கள் வங்கிகளிற்கு வருகை தந்த நிலையில் அவர்களிற்கான உதவிகளை இராணுவத்தினர் இன்றும் வழங்கியிருந்தனர்.
தமது அரச ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த மக்களிற்கு இராணுவத்தினர் படிவங்களை நிரப்புதல், அழைத்து வருதல் உள்ளிட்ட உதவிகளை இன்றும் வழங்கியிருந்தனர்.
தற்போது கொரோனா பயணத்தடை நடைமுறையில் உள்ளதால் இவ்வாறு ஓய்வூதியத்தை பெறுபவர்களை விசேட பேருந்துகளில் அழைத்துச் சென்று அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படையில் இராணுவத்தினரால் இவ் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் பயனடையும் மக்கள் அவர்களுக்கு தமது நன்றியைத் தெரித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி